tamilnadu

img

கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா உச்சம் தொட வாய்ப்பு - டிரம்ப்

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா அடுத்த 2 வாரங்களில் உச்சம் தொட வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவியுள்ள  கொரோனா வைரஸ், வல்லரசுகளையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் இன்று அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. இன்றைய சூழலில் உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,41,854 அதிகரித்துள்ளது.  பலியானோர் எண்ணிக்கை 2,475ஆக உள்ளது.  நேற்று ஒரே நாளில் 453 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4435 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என்று தெரிவித்தார். மேலும், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்சநிலைக்குச் செல்லும்  எனவும், ஜூன் 1ம் தேதிக்கு மேல் தொற்றிலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.