கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொடுக்க வழங்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ரத்து செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துவக்கத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துவழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது பல்வேறு ஆய்வுகளில் இருந்து கிடைத்த முடிவுகளின் படி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதமான பயனையும் அளிக்கவில்லை என்றும், நோய்த்தொற்றின் கால அளவையோ அல்லது மரண அபாயத்தையோ குறைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வழங்கக்கூடாது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் வழக்கமான பயன்பாட்டிற்கு தடையில்லை என்று தெரிவித்துள்ளது.