அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்தினர் நடத்தும் ஓட்டலில் பாட்னராக இருந்த தினேஷ் சாவ்லா விமான நிலையத்தில், சூட்கேஸ் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது தான் கவனக்குறைவால் சூட்கேஸ்களை தவறுதலாக எடுத்துவந்துவிட்டதாகக் தினேஷ் சாவ்லா கூறியுள்ளார். ஆனால், போலீஸார் ஆதாரங்களை சேகரித்து விசாரித்தபோதுதான் ஒரு த்ரிலுக்காகவும், வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக சூட்கேஸ் திருடியதாக தினேஷ் சாவ்லா வாக்குமூலம் அளித்தார். விசாரணையில் அவர் சூட்கேஸ் திருடியதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், சாவ்லா சூட்கேஸ் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.