tamilnadu

img

அசாம் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், கரிம்கஞ்ச், கச்சார், ஹைலகண்டி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கச்சார் மாவட்டத்தில் உள்ள கோலாப்பூர் கிராமத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து, ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள படாட்பஜார் கிராமத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.