tamilnadu

img

அசாம்: மாட்டிறைச்சி உணவு விற்ற முதியவரை தாக்கிய 8 பேர் கைது

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப் பகுதியில் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது 68) என்ற இஸ்லாமியர் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்து வந்தார். அவரை கடந்த வாரம் பசு குண்டர்கள் கொடூரமாக தாக்கினர். கொடூரமாக தாக்கிய கும்பல் சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் கண்டனங்களுடன் வைரலாகியது . மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் பசுகுண்டர்களின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


;