tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரிலேயே சுகாதார சீர்கேடு

விழுப்புரம், நவ. 2- வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் மாறு பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா, உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களை கட்டுபடுத்தி தடுக்க மாவட்ட நிர்வாக மும், சுகாதாரத் துறையும் கடந்த சில ஆண்டுகளாக விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர், சுகா தாரத் துறையினர் நேரடி ஆய்வு செய்து டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்கும் முறை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் இதனை அலட்சியம் செய்யும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும்  விதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பல்வேறு அரசு அலுவல கங்களும் செயல்படுகின்றன. அருகிலேயே ஒருங்கிணைந்த நீதிமன்ற மும் உள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே தனியார் இடம் பராமரிப்மின்றி குப்பைக் கூளமாகவும், தண்ணீரும் தேங்கி நிற்கிறது.  இதனால் கொசு உற்பத்தியாவதோடு மட்டுமல்லாமல் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக குப்பைக் கழிவு களை அகற்றி அந்த இடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.