விழுப்புரம், ஆக. 9- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் தாக்கி ரூ.3 லட்சத்து95 ஆயிரத்தி 580 கொள்ளை அடிக்கப்பட்டது. கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அபிராமி நகர் பகுதியில் அரசு மதுபானக் கடை (கடை எண் 11501) உள்ளது. இங்கு மேலாளர் மோகன் தாஸ், விற்பனையாளர்கள் அருணாச்சலம், சிவலிங் கம் ஆகியோர் சனிக்கிழமை வழக்கம் போல் மது விற்பனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவு 8 மணிக்கு கடையை மூடிவிட்டு, கணக்கு பார்த்து வசூல் தொகையை எடுத்துக் கொண்டு மூவரும் புறப் பட்டுள்ளனர். அப்போது கடைக்கு வந்த 6 மர்ம நபர்கள் மது கேட்பது போல கேட்டு திடீரென கத்தியை காட்டி 3 பேரையும் மிரட்டியுள்ளனர். இதனை அறிந்து ஊழி யர்கள் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் கத்தியால் கடை ஊழி யர்களை தாக்கி சேல்ஸ்மேன் சிவலிங்கத்தின் மோதி ரம் மற்றும் ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் மூவரை யும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அரசு மதுபானக் கடையில் ஜூலை 17ஆம் தேதி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.