tamilnadu

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை: பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், பிப்.12- விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பத்தில் விதிகளை மீறி குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைவதைத் தடுக்க வேண்டுமென அந்த  பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறிருப்பதாவது, விழுப்பு ரம் நகரத்தை ஒட்டிய பகுதி விராட்டிக்குப்பம். இங்குள்ள காலி மனையில் புதிதாக கட்டடம்  கட்டப்பட்டு வீட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் 3 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடி நீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டமைத்து வரு கின்றனர். விழுப்புரம் சுற்றுப்பகுதி கிராமங்க ளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை யின்றி நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்ட நிலையில், மக்கள் போதிய குடிநீரின்றி உள்ளனர். மேலும் இதிலிருந்து பல லட்சம் லிட்டர்  தண்ணீர் எடுக்கவுள்ளதால், சுற்றுப் பகுதி யில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கும் நிலை உள்  ளது. இதுகுறித்து மின் துறை, குடிநீர் வழங்கல் துறை, வட்டார வளர்ச்சித் துறைக ளில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.