tamilnadu

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு

விருதுநகர், மே.13- விருதுநகர் மாவட்டத்தில் தம்பதி உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 44-ஆக உயர்ந்துள் ளது. விருதுநகர் மாவட்டத்தில் 40 பேர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கர்ப்பிணிகள். விருதுநகர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கும், அவரது 29 வயது கணவருக் கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திரும்பிய வர்கள். இந்த பெண் கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இவர் கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து வந்துள்ளார். இவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அருப்புக்கோட் டைக்கு திரும்பிப 39 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள  பகுதிகளில் தடுப்பு நட வடிக்கைகள் சுகாதாரத்துறையினர்   மேற்கொண்டுள்ளனர். பாதிப்படைந்த நான்குபேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.