விருதுநகர், ஜூன் 26- கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் முழு வதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் நோய் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைக் கருவி உள்ளது. குறைவான லேப் டெக்னீ சியன்களை கொண்டு ஒரு ஷிப்ட் முறை யில் மட்டும் பரிசோதனைகள் நடைபெறு வதாகத் தெரிய வருகிறது. அங்கு கூடுத லான லேப்-டெக்னீசியன்கள், தேவை யான ஊழியர்களை நியமித்து பரிசோத னையை அதிகரிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் எடுக்கப் படும் ரத்த மாதிரிகள் வெளி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன் முடிவுகள் வெளி வர ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது.
மாதிரி எடுக்கப்பட்ட நபர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, வெளி மாவட்டத்திலிருந்து முடிவு கள் வெளியாவதை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வர்கள் விருதுநகர், இராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று தினம் தோறும் அதிகரித்து வரு கிறது. கொரோனா மருத்துவமனை களில் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். இங்கு பரிசோதனை மையங் களும் தொடங்கவேண்டும். வெளியில் இருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்புவதைஉறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தும் முகாம்களில் உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவதில் உள்ள குறைபாடுகளை களை யவேண்டும்..ஆண்கள், பெண்கள் தனித் தனியாக தங்க ஏற்பாடு இல்லை. ஆண்கள், பெண்கள் தனித்தனியே தங்க ஏற்பாடும், பராமரிப்பு ஏற்பாடும் செய்ய வேண்டும்.