விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
விக்கிரவாண்டி சட்டபேரவை உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 29 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.