வேலூர்,பிப்.18- விஐடி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் பிப்.17 முதல் 23ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமின் துவக்க நிகழ்ச்சி செவ்வாயன்று (பிப்.17) பென்னாத்தூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் துவக்கிவைத்து பேசினார். பின்னர் அவர் பேசுகை யில், ‘கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 அரசுப் பள்ளிகள், 24 கிராமங்கள் இருக்கிறது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தங்க ளால் இயன்ற உதவிகளை யும் சேவைகளையும் செய்ய உள்ளனர். இந்தியா விவ சாயம் சார்ந்த பூமி விவ சாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும். வேலூர் மாவட்டம் ஒரு காலத்தில் விவசாயம் செழிப்பாக இருந்த காலம், அதிலும் 500க்கும் மேற்பட்ட வெல்ல மண்டிகள் இருந்தன ஆனால் தற்போது இல்லை. விவசாயி தற்கொலைகளை நாம் தடுக்க வேண்டும், விவசாயம் செழிக்க இளை ஞர்கள் முன்வர வேண்டும்’ என்றார். விஐடி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய கிருஷ்ணன் முகாம் பணி யினை விரிவாக எடுத்துக் கூறி னார். பேராசிரியர் ஆஷா வர வேற்றார். விஐடி பதிவாளர் டாக்டர் கே. சத்தியநாராய ணன், மாணவர் நலன் இயக்கு னர் அமித் மகேந்திரகர், கணியம்பாடி ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் ராகவன், பென்னா த்தூர் முன்னாள் தலைவர் அருள்நாதன், பென்னாத்தூர் முன்னாள் துணைத்தலைவர் ராஜா, பேராசிரியர் பெஞ்சுலாஅன்புமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் கணியம் பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு வெள்ளையடித் தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், மாணவ மாணவிகளுக்கு ரத்த வகை கண்டறிதல் சோ தனையும் நடைபெறுகிறது. மேலும் ஸ்ரீநாராயணி மருத்துவமனை உடன் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இலவச கால்நடை மருத்துவ முகாம் , விவசாயிகளுக்கு கால்நடை வளர்த்தல் குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு பொருளாதார மேம்பாட் டுக்கு உதவும் வகையில் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு துரித உணவு செய்வது குறித்த பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.