tamilnadu

img

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில்  திருநங்கைகளுக்கு வீடு

 வேலூர்,நவ.5- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.  இதில், வேலூர் சாஸ்திரி நகர் பகுதியில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுமனையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 14 பேருக்கு வீடுகட்டுவதற்கான பணி உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வழங்கினார்.  இதேபோன்று சமூகநலத்துறை சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மன வளர்ச்சி குன்றிய 2 பேரின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 2 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.