tamilnadu

img

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அரியலூர், நவ.17- அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி மற்றும் அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்தி ரன் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமை வகித் தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர்.சீனி வாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) இரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாது காப்புத் திட்டம்) ஏழுமலை மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் து. விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.