tamilnadu

திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

விளையாட்டு மைய விடுதிகளில்  2-வது கட்டமாக சிறுவர்-சிறுமியர் சேர்க்கை

திருவாரூர், ஜூலை 3-  தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர்- சிறுமியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் பின்வரும் இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி - சென்னை நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரு கின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி - சென்னை நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.  மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு விடுதி களில் காலியாக உள்ள சிறுவர்களுக்கு இறகுப்பந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், சிறுமியர்களுக்கு தடகளம், மேசைப்பந்து, நீச்சல் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனையராக விளங்குவதற்கு 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் சிறுவர்-சிறுமியர்களுக்கு 2-வது கட்டமாக மாநில அள விலான தேர்வு வரும் 10.7.2019 அன்று காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் நேரு பூங்கா விளையாட்டு வளாகம் ஆகிய இடங்களில் நடை பெற உள்ளது. 2019-20–ம் ஆண்டிற்கு விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்கள்  முதன்மை நிலை விளையாட்டு விடுதி யில் 2-வது கட்டமாக சேருவதற்கான விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூல மாக 9.7.2019 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண் டும் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்,  எம்.எட், படிப்பில் சேர கால நீட்டிப்பு

தஞ்சாவூர், ஜூலை 3- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., பட்டப்படிப்பிற்கான நேரடிச் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ச.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.  தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை யியல் துறையின்வழி, என்சிடிஇ (NCTE) நிறுவன அனு மதியுடன் நடத்தப் பெற்று வரும் இளங்கல்வியியல் (B.Ed.) மற்றும் கல்வியியல் நிறைஞர் (M.Ed.) 2019-2021-ம் கல்வி யாண்டின் பட்டப் படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கைகள், 15.07.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை, மொழிப் புலக் கட்டடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை (பல்கலைக்கழக வேலை நாட்களில் மட்டும்) நடைபெறுகிறது.  தகுதியுடையோர் தங்களது அனைத்து மூலச் சான்றி தழ்கள் மற்றும் முதல் தவணைக் கட்டணத் தொகை ரூ.20,000 யுடன் நேரில் வரலாம். விண்ணப்பத்தினை நேரில் பெறலாம் அல்லது www.tamiluniversity.ac.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்துவிட்டு நேரில் வரலாம். விண்ணப்பக் கட்டணம்:பொது- ரூ.600, பட்டியல் இனத்த வர்-ரூ.300(உரிய சான்றிதழுடன்) அரசு விதிமுறைகளின்படி தகுதியுடையோருக்குக் கல்வி உதவித் தொகை பெற வாய்ப்புள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு என பல்கலைக்கழக பதிவாளர் முனை வர் ச.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதித்த பெண் தற்கொலை

தஞ்சாவூர், ஜூலை 3-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பிள்ளையார்திடலை சேர்ந்தவர் மீன்பிடி தொழிலாளி ராமச்சந்திரன். இவரது மனைவி விஜயலெட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 18-ம் தேதி சமையல் எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரி ழந்தார்.  இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதியவர் சடலம் மீட்பு

சீர்காழி, ஜூலை 3- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உப்பங்காடு கிராமத்தில் மைக்கேல் என்பவருக்குச் சொந்த மான வயலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் செவ்வா யன்று இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முதிய வரின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.