திருச்சிராப்பள்ளி, ஜூன் 12- திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் கடந்த 17.8.2018-ம் தேதி மணல் குவாரிகளுக்கு தடை விதித்தது. இதையடுத்து மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பெரி தும் பாதிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் தங்களது தொழிலை பாதுகாத்திடவும், வாழ்வாதாரத்திற்கு வழிசெய்ய வலியுறுத்தியும் மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தி னர்(சிஐடியு) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மாவட்ட ஆட்சி யர், பொதுப்பணித்துறை அதிகாரிகளி டம் மனு கொடுத்து பல்வேறு போராட் டங்களை நடத்தினர். சிஐடியுவினர் தொடர் போராட்டத் தின் காரணமாக திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லக்குடி காவிரி ஆற்று பகுதியிலும், ஸ்ரீரங்கம் தாலுகா திரு வானைக்காவல் - கல்லணை செல்லும் சாலை அருகே உள்ள பகுதி என 2 இடங்களில் சில விதிமுறைகளுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள செவ்வாயன்று அரசு அனுமதி அளித் தது. இந்த குவாரி 2 வருடங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. கீழமுல்லக்குடி மணல் குவாரி திறப்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா, சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர், மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்டத் தலை வர் பன்னீர்செல்வம், மணல் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் சேகர், மோகன், மணிகண்டன், பாலாஜி, மாணிக்கம், கரி காலன் ஆகியோர் பங்கேற்றனர்.