tamilnadu

img

திருச்சியில் 110 ஆண்டு பழமையான கிளப் இடிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 18-திருச்சி மேலப்புலிவார்ரோடு சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3884 சதுரமீட்டர் பரப்பளவுள்ள இடம் கடந்த 1905ம் ஆண்டு சிட்டி கிளப் என்ற பொழுதுபோக்கு மன்றதுக்கு 85 ஆண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. கடந்த 1989-ல் குத்தகை காலம் முடிந்த போது மேலும் 25 ஆண்டுக்குஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. மாத வாடகையாகரூ1,600 வசூலிக்கப்பட்டது. இந்த கிளப்பில் 400 பேர் மெம்பர் இருந்தனர். இந்நிலையில் மாநகராட்சிக்கு இந்த இடம் தேவைப்படுவதாக கூறி 2013ம் ஆண்டுகுத்தகை ரத்து செய்யப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் இடத்தை காலி செய்யவும் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சிட்டி கிளப் நிர்வாகிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த மார்ச் 27ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.இதுகுறித்து சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாஜலம், துணைத்தலைவர் மலர்செழியன் ஆகியோர் கூறுகையில், சிட்டி கிளப் 110 ஆண்டு பழமையானது. உரிய கால அவகாசம் இல்லாமல் ஒரே நாளில் காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மாநகராட்சி உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சட்டப்படியாக வழக்கு தொடர உள்ளோம் என்றனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் அதிகாரிகள், ஊழியர்கள் 4 புல்டோசர் எந்திரங்களுடன் சனிக்கிழமை காலை கிளப்பிற்குள் நுழைந்த போது கிளப் நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிளப் நிர்வாகிகள் 15 பேர், காவல்துறையால் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 5 புல்டோசர் மூலம் 3 மணி நேரத்தில்சிட்டி கிளப் முழுவதும் இடித்து தரைமட்டம் ஆகியது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.