tamilnadu

img

திருச்சி காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

திருச்சி,மார்ச்.24- திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் மாணவனைத் தாக்கிய தாளாளர் மற்றும் மாணவனைக் குற்றவாளிபோல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் வினோத் ஆகியோர் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் சம்சீர் அகமது தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் ஆணையர் மாணவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் மாநில இணை செயலாளர் ஜி.கே.மோகன் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் மாவட்டச் செயலாளர் ஆமோஸ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் திருச்சி காவல் ஆணையர் எஸ்ஐ வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உடனடியாக எஸ் ஐ வினோத்திடம் விளக்க ஆணை சமர்ப்பிப்பதாகும் கூறியதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.