திருச்சிராப்பள்ளி, ஆக.7- திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்கு சேர்ப்பதற்காக வடமாநிலத்தவர்கள் 548 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளியன்று பொன்மலை பணிமனையில் நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி பொன் மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் பொன்மலை ரயில்வே மருத்துவ மனையில் இருந்து கருப்பு கொடி யேந்தி ஊர்வலமாக வந்து ஆர்மரி கேட் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் அபிஷேகபுரம் பகுதிக்குழு செய லாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து பணி மனையில் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்பு பணி உடனே நிறுத்தப்பட் டது. போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.