தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.விவசாயிகளை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் ஆ.கார்த்திக்கேயன் வர வேற்றுப் பேசுகையில், “கஜா புயலில் தென்னை மரங்கள் பெருமளவு விழுவதற்கு தென்னங்கன்றுக ளை மேலாக நடவு செய்வதே முக்கிய காரணம். இதைத் தடுக்க புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்யும் போது 3 அடிக்கு 3 அடி ஆழத்திலும் அகலத்திலும் குழி தோண்டி நட வேண்டும். இறந்த தென்னை மரங்களை அகற்றாமல் ஆங்காங்கே போட்டு வைத்தால் சிவப்பு கூண்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு அதிக அளவில் உற்பத்தியாகி உயிர் தென்னை மரங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். அவற்றை இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தி கவர்ந்து அழிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், “தென்னை மரத்துக்கு 1 ஆண்டுக்கு தழைச்சத்து 1300 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல்சத்து 2 கிலோ, தொழு உரம் 50 கிலோ, போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் 1 கிலோ, மாங்கனிசு சல்பேட் 500 கிராம் இட வேண்டும். உரமிடும் போது தென்னை மரத்தை அடிபாகத்திலிருந்து 6 அடி தூரத்திரல் அரைவட்ட வடிவில் 1 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டி உரமிட்டு அதனை முடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 1 ஆண்டுக்கு தேவையான உரங்களை இரண்டாக பிரித்து ஜூன், ஜூலை மாதத்தில் ஒருமுறையும், டிசம்பர், ஜனவரி மாதத்தில் ஒருமுறையும் இட வேண்டும். தென்னை மரத்தின் அடிப்பகுதியில் மரத்தைச் சுற்றி 50 கிராம் சணப்பை விதைத்து, பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுது மண்ணில் மக்கச் செய்வதன் மூலம் மரத்துக்கு தேவையான தழைச்சத்தை பெறலாம். மேலும் முதல் 5 ஆண்டுகளில் ஊடுபயிராக பயிர் வகை எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறிகள், வாழை பயிரிடுவாதல் விவசாயிகள் தென்னை மரம் காய்ப்புக்கு வரும் வரையில் வருமானம் பெற்று தங்கள் வாழ்வாதா ரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்” என்றார். பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் மதிராஜன் பேசினார். பயிற்சி எற்பாடுகளை மதுக்கூர் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சரவணி பெனிக்சன் செய்திருந்தனர்.