தஞ்சாவூர், ஜூலை 9- மத்திய அரசால் அமைக்கப் பட்ட, விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் குழு உருவாக்கியுள்ள வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019, மருத்துவக் கல்வியை முழுமை யாக வணிகமயமாக்குவது, கார்ப்ப ரேட் மயமாக்குவது என்ற நோக்கு டன் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகள் தாங்களே பாடத்திட் டத்தை உருவாக்கிக் கொள்ள லாம், கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என இக்கொள்கை யில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளே 20 விழுக்காடு மாணாக்கர்களுக்கு முழுமையான கல்வி உதவித் தொகையையும், 50 விழுக்காடு மாணாக்கர்களுக்கு பகுதி அள விலான கல்வி உதவித்தொகையை யும் வழங்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது. அதுவும் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கி யவர்களுக்கு கல்வி உதவித் தொகை எனக் கூறப்பட்டுள்ளது.சமூக ரீதியாக கல்விரீதியாக பின் தங்கியவர்களுக்கு என கூறப்பட வில்லை. எஸ்சி/எஸ்டி/ஓபிசிக்கு எனவும் கூறவில்லை. முழுமை யான, பகுதியான உதவித் தொகை என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. கல்வி உதவித் தொகையை அரசு வழங்குவதற்கு பதிலாக, கல்லூரிகளிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பது சரியல்ல.இது, கல்வி உதவித் தொகை வழங்க வேண்டிய தனது பொறுப்பை, அரசு, தட்டிக் கழிக்கும் செயலாகும். தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி யின பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மாணாக்கர்களை, இது, மிகவும் பாதிக்கும். அவர்களை மருத்துவப் படிப்புகளில் சேர விடாமல் தடுக் கும். லாபமீட்டும் கார்ப்பரேட் நிறு வனங்களும், லாப நோக்கில் மருத்துவக் கல்லூரிகளை தொடங் கிட எம்சிஐ விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸிட் தேர்வு அவசியமற்றது
இந்நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தாங்களே கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனு மதிப்பது, மருத்துவக் கல்வியை முழுமையாக வணிகமயமாக்கி விடும். பணக்காரர்கள் மட்டுமே படிக்கக் கூடிய கல்வியாக, மருத்து வக் கல்வியை மாற்றிவிடும். இட ஒதுக்கீடு பற்றியோ, சமூக நீதி பற் றியோ, இக்கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில், எக்ஸிட் (EXIT) தேர்வு என்ற தேசிய தகுதித் தேர்வை புகுத்துவது கண்ட னத்திற்குரியது. இத்தேர்வு அவசிய மற்ற ஒன்றாகும். இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் மாணாக்கர்கள் படிக்கிறார்கள். மத்திய, மாநில அரசு களால் அங்கீகரிக்கப்பட்ட பல்க லைக் கழகங்கள் நடத்தும் தேர்வு களை எழுதித்தான் வெற்றி பெறு கிறார்கள். இறுதியாண்டுத் தேர்வில் வெற்றி பெற்ற பிறகுதான்,ஓராண்டு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெறு கிறார்கள். அதன் பிறகுதான் அவர்கள் மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து தொழில் செய்கி றார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது, தேசிய அளவில் எக்ஸிட் தேர்வு என்ற ஒரு புதுத் தேர்வை புகுத்துவது அவசியமற்றது. ஒரே ஒரு தேர்வு மூலம் மட்டுமே, ஒரு மருத்துவரை திறமையானவ ராக மாற்றிவிட முடியாது. அறி வியல் தொழில் நுட்ப ரீதியாக மேம் படுத்திக் கொள்வதற்கான தொடர் முயற்சியும்,பயிற்சியும், அதற்கான வாய்ப்பும், மருத்துவத் துறையில் கூட்டு உழைப்பால் ஏற்படும் அனு பவமுமே ஒரு மருத்துவரை திறமை யானவராக மாற்றும்.திறமையான வராக நீடிக்கச் செய்யும். இந்த அடிப்படை புரிந்து கொள்ளல் இல் லாமல், ஒரு தேர்வின் மூலம் மருத்து வர்களை, திறமையானவர்கள் என வரையறுப்பதோ, அல்லது மாற்ற முயல்வதாகக் கூறுவதோ அறிவுப் பூர்வமானதாகாது.
சீரான கல்வியை ஒழிக்கும் முயற்சி
போட்டித் தேர்வுகளை நடத்தும் தனியார் நிறுவனங்களின் லாப வேட்கையை திருப்தி செய்வதற்கா கவே இத்தகையத் தேர்வுகள் புகுத் தப்படுகின்றன. அதாவது தேர்வு களே வணிகமயமாக்கப்படு கின்றன. “எக்ஸிட்” தேர்வையே முதுநிலை மருத்துவக் கல்விக்கான போட்டித் தேர்வாகவும் மாற்றுவது பல்வேறு பிரச்சனைகளை உரு வாக்கும். தவிர, “இணைப்புப் படிப்புகள்(Bridge Courses), ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated Courses) என்ற பெய ரில் நவீன அறிவியல் மருத்து வத்தை (Modern Scientific Medicine) நீர்த்துப் போகச் செய்யும், தரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகளும் உள்ளன. மருத்துவக் கல்லூரிகளே பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது பல்வேறு மோசமான விளைவுகளை, குழப் பங்களை உருவாக்கும்.நாடு முழு வதும் ஒரே சீரான தரத்திலான மருத்துவக் கல்வி வழங்கும் முறை யை ஒழித்துக்கட்டும். மருத்துவப் பல்கலைக் கழகங்களை ஒழித்துக் கட்டும் மறைமுக நோக்கமும் இதில் உள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் “பாரம்பரிய மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ முறை” என்ற பெயரில், பழைய பிற்போக்குக் கருத்துகளை புகுத் தும் நோக்கமும் ,இந்தக் கல்விக் கொள்கையில் அடங்கியுள்ளது. இக்கொள்கை, நமது நாட்டின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் எதிராக உள்ளது. மக்களின் இன்றைய மருத்துவத் தேவைகளுக்கும், நாட்டின் கூட்டாட்சி கோட்பாட் டிற்கும்,மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. இந்திய மருத்து வக் கழகத்தை(MCI) ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்(National Medical Commission) என்ற அமைப்பை உருவாக்கவும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணை யத்திற்கு, மருத்துவக் கல்வி பாடத்திட்டங்களை வகுக்கும் அதி காரம் இருக்காது. எனவே, இந்த மக்கள் விரோத வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 யை முழு மையாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாண வர்கள் கல்லூரிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்றனர்.