tamilnadu

img

மயிலாடுதுறை நகராட்சி அடாவடி

ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தரங்கம்பாடி ஜூன் 19- மயிலாடுதுறையில் 15 ஆண் டுக்கும் மேலாக சாலையோரம் அமர்ந்தும், தள்ளுவண்டிகளிலும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்று வந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை காவல்துறை உதவியுடன் நகராட்சி ஆணையர் முன்னிலையில் அடித்து, உடைத்து அள்ளிச் சென்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகை மாவட்டம் மயிலாடு துறை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியான வண்டிக்காரத் தெருவில் தரைக்கடை வியா பாரிகள் 100க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். சிறு விற்பனையாளர்கள் சங்கத் தில்(சிஐடியு) உறுப்பினர்களாக உள்ள நிலையில் வெண்டிங் கமிட்டி அமைத்து 2 ஆண்டுகளான நிலை யில் இதுவரை கூட்டத்தை கூட்டா மல் நகராட்சி நிர்வாகம் ஏமாற்றிய தோடு வரி என்ற பெயரில் வியாபாரி களை மிரட்டி பணம் கேட்டு தொந்த ரவு செய்து வந்தனர். வெண்டிங் கமிட்டி கூட்டத்தை கூட்டினால் தான் நாங்கள் வரி தரு வோம். ஏற்கனவே இருந்ததுப் போல் இருபுறமும் கயறு கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி வந்த னர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் செவ்வாயன்று காலை 150க்கும் மேற்பட்ட காவல் படையுடன் வந்த நகராட்சி ஆணை யர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழி யர்கள் அப்பாவி வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கி சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட் களை சேதப்படுத்தி அள்ளி சென்ற னர். மேலும் வெண்டிங் கமிட்டி யெல்லாம் கூட்ட முடியாது, கயிறும் கட்டி தர முடியாது என அதிகாரி கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டா லின், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணேசன், வட்ட செயலாளர் சி. மேகநாதன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன், சிறு விற்ப னையாளர் சங்க மாவட்ட செயலா ளர் துரைக்கண்ணு, சங்கத்தின் உறுப்பினர் சிவராமன் ஆகி யோரை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமை யிலான காவல்துறை கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையிலடைத்துள்ளது. அன்றாடம் வயிற்றுப் பிழைப் புக்கு சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து வந்த ஏழை மக் களை அடித்து, உதைக்கும் காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மயிலாடுதுறை நகரத்தில் பெரும் நிறுவன ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும் முன்னாள் எம்எல்ஏவுமான வீ.மாரிமுத்து, மாவட்ட செய லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனி வாசன், துரைராஜ் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியாபாரிகளை சந் தித்து ஆறுதல் கூறியதோடு, நக ராட்சி நிர்வாகம், காவல்துறை நட வடிக்கைக்கு கடும் கண்டனத்தை யும் தெரிவித்துள்ளனர்.