திருச்சிராப்பள்ளி: திருச்சியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் கே.பாலபாரதி இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கி பேசினார். அறிக்கையை பொதுச்செயலாளர் பி.சுகந்தி வாசித்தார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட தலைவர் லிங்கராணி உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.