அறந்தாங்கி, ஆக.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் ஆய்வுப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் வியாழன் அன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எஸ்.கார்த்திகா தலைமை வகித்தார் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் எம்.சிவகாமி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் கே.ஆர்ஹரிஹரன், ஏ.மாரிகுமார், சுகாதார ஆய்வாளர் எம்.விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் ஆசைதம்பி நன்றி கூறினார்