tamilnadu

கரூர் மற்றும் புதுதில்லி முக்கிய செய்திகள்

தொழிலாளர் நலவாரிய நிவாரணம் உடனே வழங்கக் கோரி போராட்டம்

கரூர், ஜூன் 12- நல வாரியம் மூலமாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பபடாத உறுப்பினர்களுக்கு நிவாரணத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், புதிய  உறுப்பினர் பதி விற்கு  முகாம்கள் அமைக்க வேண்டும். நிவாரணத் தொகையை ரூ 7500 ஆக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கையை வலியுறுத்தி மனு வழங்கும் போராட்டம் கரூர் மாவட்ட தொழிலா ளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடை பெற்றது. இதில் கொரோனா நிவாரணத் தொகை கிடைக்காத 500க்கும் மேற் பட்ட உறுப்பினர்கள் மனு அளித்தனர். கட்டுமான சம்மேளன மாநில பொதுச் செயலாளர் குமார் தலைமையில் தொழிலாளர் துறை கரூர் மாவட்ட உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கினர். சிஐடியு சங்க கரூர் மாவட்ட  தலைவர்  ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் கந்த சாமி, ராஜீவ்காந்தி, கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கொரோனா சோதனை நடத்த பெரும் தனியார் ஆய்வகத்திற்கு  தடை

புதுதில்லி,ஜூன் 12- பரிசோதனை முடிவுகள் தாமதத்தால் மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில் தலைநகர் மும்பையில் உள்ள மிகப்பெரிய தனியார் ஆய்வகத்தில் இருந்து சோதனை  முடிவுகள் வெளியாக மிகவும் தாமதமாகி உள்ளது. இதனால்  நகர குடிமை அமைப்பான பிரஹன் மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.  சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டுபிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும்  சில சந்தர்ப்பங்களில், மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இந்த ஆய்வகம்  தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது, தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள்.  தாமதமான அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.

குடவாசலில் ஒருவருக்கு கொரோனா

குடவாசல், ஜூன் 12- குடவாசல் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பேக்கரி கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா நோய் ஏற் பட்டதாக கூறி கடந்த 9 ஆம் தேதி மாலை குடவாசல் வட்டாட்சியர் பரஞ்சோதி நடவடிக்கையின் பேரில் கடை மூடப்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து மீண்டும் பேக்கரி கடை திறக்கப்பட்டது. மீண்டும் தற்போது கடை மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரி கள் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் அந்தப் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவில்லை. ஆகவே இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து வட்டாட்சியர் பரஞ்சோதி கூறுகையில், பேக்கிரி கடையில் உள்ள ஊழியருக்கு முதல் கட்ட சோதனையில் கொரோ னா பாதிப்பு அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவரை திருவா ரூர் மருத்துவ கல்லூரிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உடனடியாக பேக்கரி மூடும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கடையில் உள்ள மற்ற ஊழியர்கள் மற்றும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று பரிசோதனை உடனடியாக செய்தால் கொரோனா பாதிப்பு அறிய முடியாது. எனவே ஒரு வார கால இடைவெளிக்குப் பின் பரிசோதனை செய்தால் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்க முடியும் என்ற  அடிப்படையில் கடை மீண்டும் திறக்கப்பட்டது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி அனுப்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து உடனடியாக மீண்டும் கடையை மூட உத்தரவிட்டதாக கூறினார்.