பொதுமக்கள் அறிவிப்பு
சீர்காழி, டிச.13- சீர்காழி அருகே எருக்கூரில் சாலை யில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் அடிக்கடி விபத்துகள் நடந்ததை யொட்டி கிராம மக்கள் சார்பில் வைத்த கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ் சாலைத்துறையால் எருக்கூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக் கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று கவர்னர் வருகை யையொட்டி, வேகத்தடை அகற்றப் பட்டது. அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அதே இடத்தில் இரண்டு நாட்க ளில் அமைத்து தருவதாக தேசிய நெடுஞ் சாலைத்துறையின் நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் உறுதியளித் தும் இது நாள் வரை வேகத்தடை அமைக்கவில்லை. இது குறித்து எருக்கூர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் உடனடியாக அமைத்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்தும் இது நாள் வரை அமைத்து தரவில்லை. கடந்த 6 ஆம் தேதி பால் ஏற்றி வந்த ஒரு லாரி எருக்கூரில் விபத்துக்குள்ளானதற்கு வேகத்தடை இல்லாததே காரணமா கும். அதிகாரிகள் சொன்னது போல் அகற்றிய இடத்தில் இது வரை வேகத் தடையை மீண்டும் அமைக்கவில்லை. இன்னும் மூன்று நாட்களில் எருக்கூரில் வேகத்தடையை மீண்டும் அமைக்கத் தவறினால் நூற்றுக்கணக்கான மக்களு டன் சாலை மறியல் போராட்டம் நடத்தப் படும் என மக்கள் தெரிவித்தனர்.