tamilnadu

img

இலவச சைக்கிள் வழங்கல்

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்க ளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் ஜெயமாலனி சிவராஜ் தலைமை வகித்தார்.ஒன்றிய குழு துணை தலைவர் மைனர்.பாஸ்கர்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் என். ஸ்ரீதர் வரவேற்று பேசினார். பூம்புகார்  தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், 72 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி உரை யாற்றினர். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.