tamilnadu

img

துறையூரில் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 27- திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்தில் நுண்நிதி நிறுவ னங்கள் அடாவடி வசூல் செய்வதை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் வெள்ளியன்று துறையூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் திலகா தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்டச் செயலா ளர் மல்லிகா, துணை செயலாளர் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஆனந்தன் ஆகியோர் பேசினர். பின்னர் உதவி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.