திருச்சிராப்பள்ளி, அக்1- திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் அனைவருக்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும். அந்தோணியார் கோவில் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தேரடி தெரு முதல் சூலை வரையும், சங்கேந்தி மற்றும் வைகை காலனிக்கும் தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும். ஏரியை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புள்ளம்பாடி ஒன்றிய குமுர் கிளை சார்பில் திங்களன்று சவுக்கண்டி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், நடராஜன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலராஜ், யோகராஜ், பழனிச்சாமி, சண்முகம், செல்லதுரை, தியாகராஜன், குமார், ஜெகதீசன், துரைசாமி, செபஸ்டியன், அன்பரசன், வினோத், ஏசுராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.