tamilnadu

img

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்கின்ற விதத்தில் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி ஆட்சி மாற்றம் செய்ய முயன்று வரும் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு, துணைத்தலைவர்கள் செந்தில்நாதன், முரளி, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜி.கேமுரளி, ரெக்ஸ், புத்தூர் சார்லஸ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.