tamilnadu

img

ஏ.வி.சி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மயிலாடுதுறை: பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள மார்க்க தர்ஷன் திட்டத்தின் கீழ் ஏ.வி.சி பொறியியல் கல்லூரியும் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சிறப்பு செயல் திட்டங்கள், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடு களில் இரு கல்லூரிகளும் இணைந்து செயல்படும்.  மேலும் என்.பி.ஏ எனப்படும் தரக் கட்டுப்பாடு பெறுவதற்கான பயிற்சியும் இதன் மூலம் செயல்படுத்தப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மணக்குள விநாயகர் கல்லூரியை சேர்ந்த முனைவர் வேல்முருகன் வழங்க ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்தி கேயன். கல்லூரி முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ், நிர்வாக இயக்குனர் முனைவர் எம். செந்தில் முருகன், துணை முதல்வர் எஸ். செல்வமுத்துக்குமரன் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார். இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் ஜெயச்சந்திரன் மற்றும் முனைவர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.