tamilnadu

img

மீண்டும் அந்த ‘இனிய’ ரயில் பயணம் எப்போது துவங்கும்?

மன்னார்குடி, ஜூன் 2-2012-க்கு பிறகு வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் - காரைக்குடி பகுதி ரயில்சேவை 1.6.2019மீண்டும் துவங்கியது. வயல்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள், சாலைகள் வழியே நீண்டு செல்லும் ரயில்வே வழித்தடம் நெடுகிலும் உள்ள கிராமங்களில் பரவிய இந்த செய்தி மகிழ்ச்சிப் பெருவெள் ளத்தை மடை திறந்து வைத்தது. திருவாரூர் துவங்கி காரைக்குடி வரை மீண்டும்ரயில்வே கேட்டுகள், ரயில் நிலையங்கள் களை கட்டத் துவங்கியது. ஆற்றின் ரயில்வே கர்டர்களின் தடதடக்கும் மந்திர அதிர்வொலி நீண்ட தூரம்கடந்து எதிரொலிக்கும் என ரயில் தடஇல்லங்கள் கனவுகள் கண்டன. ரயில் கூவல் ஒலியை கேட்டு அன்றாட வேலையை துவக்குவோம் என தொழிலாளர்கள் தங்கள் புதிய நேரக்காட்டியை கற்பனைசெய்து வைத்திருந்தனர். 12லிருந்து 24-ஐதொடும் விடலைப் பருவத்தின் வாழ்க்கை கனவுகளோடும் இப்போது ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த வழித்தட ரயில் பயணம் அலாதியான வாச வாழ்க்கையை வாரி வழங்கியிருந்தது. குறிப்பாக அதிராம்பட்டிணம் காதர் மைதீன் கல்லூரி, திருவாரூர் திருவிக கல்லூரிகளின் வாலிப வாழ்க்கையை தினசரி ரயில் பயணங்கள் காவியமாக மாற்றியிருந்தன. மீண்டும் இந்த இனிய ரயில் பயணங்கள் 1.6.2019-லிருந்து துவங்கியிருக்கிறது என மகிழ்ந்தனர். திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக் கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வட்டார மக்களுக்கு உண்மையில் இனிப்பான செய்திதான் இது. ஆனால்எந்த காரணத்திற்காக இந்த ரயில் சேவைதாமதமானதோ அந்த காரணம் இன்னமும்தீர்க்கப்படவில்லை. இதுதான் பிரச்சனையாக வெடித்துள்ளது.

திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில்உள்ள 72 கேட்டுகளில் 59 கேட்களில் கேட்கீப்பர்கள் இல்லை. திருச்சி கோட்ட பொறியியல் துறையில் தண்டவாள பராமரிப்பு பிரிவில் மட்டும் 569 கடைநிலை ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவைஅனைத்தும் ரயில்வே கேட்களில் கேட்கீப்பர்களாக பணியாற்றக்கூடிய ஊழியர் களை உள்ளடக்கிய பணியிடங்களாகும். இவைகளை நிரப்ப நிர்வாகம் தாமதித்து வருவதால் 59 கேட்டுகளில் ஊழியர்கள் இல்லை. இந்த நிலையிலேயே திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவையை இயக்கஇந்தியாவில் எங்கும் இல்லாத புதியடெக்னிக்கை அமல்படுத்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. எஞ்சினில் ஒரு லோகோ பைலட்டுடன் இரண்டு கேட் கீப்பர்கள் சென்றனர்.அதேபோல் கார்டு பெட்டியில் இரண்டுகேட் கீப்பர்கள் இருந்தனர். கேட்டிற்கு சுமார் 100 அடிக்கு முன்பாகவே ரயில் வண்டிநிறுத்தப்படும். உடனே எஞ்சினிலிருந்து கேட் கீப்பர்கள் குதிப்பார்கள். ஓடிச்சென்றுகேட்டை மூடிவைப்பார்கள். பின்னர் எஞ்சினில் தாவி ஏறிவிடுவார்கள். ரயில் கேட்டைஊர்ந்து சென்று கடக்கும்போது கார்டு வேனில் இருக்கும் மற்ற இரண்டு கேட் கீப்பர்களும் குதிப்பார்கள். கேட்டை திறந்துவைத்து விட்டு மீண்டும் கார்டு வானில் தாவி ஏறிக்கொள்வார்கள்.

இப்படியே 72 கேட்களில் ஆள் இல்லாத கேட்டுகளை ரயில் கடந்தது.இதில் வேடிக்கை என்னவென்றால் ரயில் வேகத்தைக் குறைத்தும் வேகத்தை கூட்டும்(ஆக்சிலரேசன் - டிசலரேசன்) இயக்கத் தாமதம் மற்றும் கேட்டை மூடிபின்னர் திறந்து வைக்கும் நேரம் உள்படகுறைந்தது ஒரு கேட்டிற்கு சராசரியாக 7 நிமிடங்கள் பிடிக்கும். சுமார் 59 கேட்கள் என்று வைத்துக் கொண்டால்கூட சுமார்400 நிமிடங்கள் சுமார் 6 மணி நேரம் தாமதமாகக்கூடும். என்னதான் இடை நேரத்தைவிரட்டிக் குறைக்க முயற்சித்தாலும் குறைந்தது மூன்று, நான்கு மணி நேரமாவது ஆகுமே என்பதுதான் ரயில்வே ஊழியர்கள்அனைவரின் கவலையாக இருந்தது. 1.6.2019 காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு காரைக்குடியை அடையவேண்டும். ஆனால் அந்த ரயில் மாலை 6 மணிக்குத்தான் காரைக்குடியை சென்றடைந்துள்ளது. எனவே பிற்பகல் 2.30 மணிக்கு திருவாரூரில் புறப்பட வேண்டிய ரயில் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அன்று மாலையே அறிவிக்கப்பட்டது. இதுஎப்போது மீண்டும் துவங்கும் என்ற கேள்விஎழுந்துள்ளது. இது பல சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. 1.6.2019 அன்று உயர்அதிகாரிகள் எவரும் திருவாரூர் - காரைக்குடி ரயில் துவக்க நிகழ்ச்சிக்கு வரவில்லை. வழக்கமான சனாதன சாங்கியபுரோகித தடபுடல்கள் ஏதும் இல்லை. பிஜேபி உயர்மட்ட தலைமை நிகழ்ச்சியில்பந்தா காட்டவில்லை. தென்படவே இல்லை. இதுதான் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. பயணிகள் போக்குவரத்து ரயில்இயக்க நுட்பங்கள் நன்கு தெரிந்த தென்னகரயில்வே நிர்வாகத்தின் தலைமை, சாத்தியக்கூறுகளை கவனிக்காதது தடுமாற்றத் தின் விளைவா அல்லது திட்டமிட்டு சாத்தியக்கூறுகளை திசை திருப்பும் முயற்சியா?பிராந்திய முன்னுரிமைகளை புறக்கணித்து அகில இந்திய ரயில்வே நிர்வாகம்ஊழியர்களை தேர்வு செய்த செயல் ஏற்கனவே கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் தென்னக ரயில்வேக்கு தேவையான நான்காம் நிலை ஊழியர்கள் ஏற்கனவே சுமார் 1650 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதத்தினர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றுரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின் றன.இவர்கள் மீண்டும் உடனே பணியில் அமர்த்தப்பட்டால் மீண்டும் மேல்மட்ட நிர்வாகம் அம்பலமாகி சர்ச்சைகள் தலைதூக்கும் என்பதால் அவர்களை பணியில் அமர்த்துவதை தாமதப்படுத்தி வெகுஜன கவனத்தை திசைமாற்ற சாத்தியமற்ற சர்க்கஸ் வேலைகளை செய்து தற்காலிகமாக சேவையை நிறுத்த தென்னக ரயில்வேசெய்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.எது எப்படியாயினும் ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு தெளிவாக உள்ளது.தாமதமில்லா விபத்தில்லா பயணத்தைஉறுதி செய்திட அனைத்து ரயில்வே கேட்களுக்கும் ஜுன் மாத இறுதிக்குள் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படவேண்டும். கூடுதல் பாசஞ்சர் மற்றும் விரைவு ரயில்கள்சேவை துவக்கப்படவேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை முன்பு மாவூர் ரோடு, திருத்துறைபூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை நிலையங்கள்ரயில் இயக்க கட்டுப்பாட்டு நிலையங்களாக(பிளாக் ஸ்டேஷன்களாக) இருந்தன.மாவூர் ரோட்டிற்கு பதிலாக திருநெல்லிக் காவல் பிளாக் ஸ்டேஷனாக மாற்றப்பட் டுள்ளது.

இதற்கு கூறப்பட்ட காரணம் திருநெல்லிக்காவல் மாவூரை விட மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர் மற்றும் ரயில்வேநிர்வாக விதி மற்றும் வசதி என்பதுதான்.ஆனால் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அலையாத்திக்காடுகளின் அரவணைப்பில் உள்ள அழகு நிலமான மிகப்பெரிய முத்துப்பேட்டை நகரத்தின் ரயில் நிலையத்தின் தரம் மட்டும் ரத்து செய்யப்பட்டு விட்டது. முன்பதிவு, முதியோர் கட்டண சலுகை, பார்சல் ஏற்றுதல்- இறக்குதல், வாரண்ட் மாற்றும் வசதிஉள்ளிட்ட வசதிகளை பறித்து இது மிகப்பெரும் அநீதியை முத்துப்பேட்டை நகருக்கு ரயில்வே நிர்வாகம் இழைத்துள்ளது. அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்ற வெகுஜன அமைப்புகள் இணைந்து மிகப்பெரும் போராட்டத்திற்கு தயாராகும் முன்பாகவே இந்த அநீதி களையப்படவேண்டும். இதற்கு வி்ரைந்து தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

- நீடா சுப்பையா