திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி கிளையின் முன்னாள் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தோழருமான கே.எம்.செல்வம் 13 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி கள்ளிக்குடி கடைத்தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எம்.எஸ்.தேவகி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி கே.எம்.செல்வம் நினைவாக கொடியேற்றி மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, கே. பழனிச்சாமி மற்றும் வி.ச ஒன்றிய பொருளாளர் இ.மாரிமுத்து, கிளைச் செயலாளர் எம்.பாஸ்கர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.