திருத்துறைப்பூண்டி, ஆக.11- திருவாரூர் மாவட்டம் திரு த்துறைபூண்டி பகுதியை சேர்ந்த தமிழழகன், பாலா, பிரகாஷ் என்ற மூன்று இளை ஞர்கள் போதையில் இரு சக்கர வாகனத்தில் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் மட ப்புரத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை இருசக்கர வாகனத்தில் வேக மாக சென்று பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில் திரு த்துறைப்பூண்டி மன்னை சாலை மெயின் ரோட்டில் நின்ற விக்னேஸ்வரன் என்ப வரது காரின் பின்பக்க கண்ணாடியை உடை த்தும் காரையும் அடித்துள்ள னர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்கள் விரட்டியபோது, அவ ர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். தப்பிய மூவரையும் வந்த காவ ல்துறையினர்-பொதுமக்கள் கைது செய்து அழைத்து வந்தனர். போதையில் அட்ட காசம் செய்த மூன்று இளை ஞர்கள் மீது திருத்து றைப்பூண்டி காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.