திருவண்ணாமலை, ஜூலை 23- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வன உரிமைச் சட்டதிருத்தத்தை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. வன உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதால், மலைவாழ் மக்கள் வன நிலங்களில் இருந்து வெளி யேற்றப்படுவார்கள். மக்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்ப டும், இத்தகைய செயல்பாடு களை செய்துவரும், மலைவாழ் மக்களுக்கு எதி ரான மோடியின் தலைமை யிலான மத்திய அரசை கண்டித்து, ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சி. அப்பாசாமி, பெ.கண்ணன், ஆர்.சிவாஜி, விவசாயிகள் சங்க நிர்வாகி உதயகுமார், மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.