திருவண்ணாமலை,பிப்.3- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனப்பகுதியில் மலை மாடுகள் பராமரிக்கும் விவசாயிகள் சங்கம் துவக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில், சாத்தனூர் வனப்பகுதி மலை மாடுகள் பராமரிக்கும் விவசாயிகள் சங்கம் திங்களன்று(பிப்.3) துவங்கப்பட்டது. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கொடியை ஏற்றி கிளையை துவக்கி வைத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி. கே. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ், சிபிஎம் வட்டச் செயலாளர் இரா. அண்ணாமலை, சிஐடியு முபாரக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் வனப்பகுதியில் மாடு மேய்க்கும் உரிமையை வழங்க வேண்டும், அழிந்துவரும் நாட்டு மாடு இனத்தை பாதுகாத்து வரும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.