tamilnadu

அறிக்கை வெளியிட்ட தலைவர் மீதான குற்றக்குறிப்பாணையை ரத்து செய்க

திருவள்ளூர், ஜூன் 30- தமிழ்நாடு மேல்நி லைப் பள்ளி தலைமையாசி ரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிசந்திரன் மீதான 17 (பி) குற்ற குறிப்  பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் மாநில பொதுச்  செயலாளர் எஸ். ஞான சேகரன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: 10, 11ஆம் வகுப்பு வகுப்பு  பொதுத் தேர்வு மதிப்பெண்  தொடர்பாக, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் கள் கணக்கிடுவதில் உள்ள  இடர்பாடுகள், ஏற்றத் தாழ்வு கள் உள்ளன. தேர்வுகளில் மாற்று திறனாளிகள் நிலை, தனித் தேர்வர்களின் நிலை மற்றும் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளபோது, மாணவர்களின் நிலை பற்றி மாநிலத் தலைவர் மா.ரவிசந்திரன் அறிக்கை வெளியிட்டார். அதில், பள்ளிக்கல்வித்  துறை இயக்குனர் வெளி யிட்ட அறிக்கையை விமர்ச னம் செய்யப்பட்டிருந்தது.  இதனடிப்படையில் மா. ரவிச்சந்திரன் அரசா ணையை விமர்சனம் செய்தார் என குற்றம் சாட்டி பள்ளிக்கல்வி இயக்குநர், 17 (பி) குற்றச்சாட்டு குறிப்  பாணையை  வழங்கியுள் ளார். இது ஜனநாயக விரோத மானது. தமிழக அரசும், பள்ளிக்  கல்வித் துறை இயக்குநரும் எங்களது அமைப்பின் மீதும், மாநிலத் தலைவர் மீதும் தொடர்ந்து உண் மைக்கு புறம்பான குற்றச்  சாட்டுகளை புனைந்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும், உண்  மைக்கு புறம்பாக குற்றச் சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.