அவிநாசி, ஜூன் 22- அவிநாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் யோகா பயிற்சி யில் ஈடுபடுமாறு கல்வித் துறை அதிகாரி உத்த ரவின் பேரின் யோகா பயிற்சி நடைபெற்றது. இது மாணவர்களிடையே திணிப்பதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டி உள் ளனர். அவிநாசி ஒன்றியங் களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், தேசிய விளையாட்டான ஹாக்கியின் மீது மாணவர்கள் ஆர்வமின்றி உள்ளனர். தமிழகத்தின் வீர விளையாட்டு கபடி மறக் கடிக்கப்படுகின்றன. ஆனால் குரு வந்தனம் என்ற பெயரில் இந்துத்து வாவின் நிகழ்ச்சி நிரழ் புகுத்தப்படுகிறது. அதையொட்டித்தான் யோகாவிற்கு முக்கி யத்துவம் தரப்படுகிறது. எனவே பாரம்பரிய கலைகளையும், விளையாட்டுகளையும் கல்வித்துறை பயிற்றுவிக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராகல்பாவி
இதேபோல் உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த யோகாபயிற்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இதில் உதவி ஆசிரியர் கண்ண பிரான் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.