tamilnadu

img

மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி நிறுத்தம் பொதுமக்கள் சாலைமறியல்

அவிநாசி, ஜூலை 10- அவிநாசி அருகே மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை நிறுத்தக்கூடாது எனக் கூறி  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசியை அடுத்த கருவலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்காக கருவலூர் கிழக்கு வீதி யில் தோப்புக் கருப்பராயன் கோயில் வளா கத்தில் மேல்நிலைத் தொட்டி அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலை யில், கோயில் நிர்வாகத்தினரின் அனும தியின்றி கட்டுமானப் பணிகள் நடை பெறுவதாகவும், தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்குமாறு ஒரு தரப்பு சார்பில் ஊராட்சி நிர்வாகத்தில் வியாழனன்று காலை மனு அளித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள், கட்டுமானப் பணியை நிறுத்தக் கூடாது அதே இடைத் தில் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண் டும் எனக்கூறி வியாழனன்று மாலை கரு வலூர் - மேட்டுப்பாளையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவயி டத்திற்கு வந்த காவல் துறையினர் மறிய லில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், விரை வில் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தனர். இதைய டுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.