அவிநாசி, ஜூன் 23- அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், புதுப்பிக்கப் பட்ட படிப்பகம், பயணிகள் நிழற் குடை, தியாகிகள் திருவுருவப் படம் திறப்பு விழா ஞாயிறன்று திரு முருகன் பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், திரு முருகன்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சிக் கொடியை மூத்த தோழர் முருகப்பன் ஏற்றி வைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினருமான கே.தங்க வேல் புதுப்பிக்கப்பட்ட படிப் பகக் கட்டித்தைத் திறந்து வைத் தார். 1965ஆம் ஆண்டு படிப்பகம் உருவாக்க காரணமான இருந்த வையாபுரி, எஸ்.கிருஷ்ணன் திரு வுருவப்படங்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி திறந்து வைத்தார்.பேருந்து பயணிகள் நிழற்குடையை மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் பி.முத்துசாமி, ஏ.ஈஸ்வர மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிர மணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக வி.நட ராஜன் நன்றி கூறினார்.