tamilnadu

img

திருமுருகன்பூண்டியில் தேசிய நூலக வார விழா

அவிநாசி, நவ.24- திருமுருகன்பூண்டி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா சனியன்று நடைபெற்றது. அவிநாசி அருகே திருமு ருகன்பூண்டியில்நடை பெற்ற 52 வது தேசிய நூலக வார விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் இரவீந்தரக்குமார் தலைமை வகித்தார்.சங்க பொறுப்பாளர்கள் டி.எம்.ஆ றுமுகம், சுந்தரம்முருகானந்தம், கனகரத்தி னம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து புதிய புரவலர்களாக இரவீந்தரக்குமார், ஜாபர், மாணிக்கம், சொக்கலிங்கம் ஆகியோர் இணைந்து, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான நாற்காலி, மின்விசிறி, சுவர் கடிகாரம், எழுது பொருள்கள் உள்ளிட்ட தளவாட பொருள்களை நூலகத்திற்கு வழங்கினர். இதையடுத்து, வாசகர் வட்டத்திற்கான நூலக ஆர்வலர் விருது வாசகர் வட்டத் தலை வர் தி.மு.அருணாசலத்திற்கு வழங்கப்பட் டது. இவ்விழாவின் ஒருபகுதியாக புத்தக கண்காட்சியும் நடைபெற்றது. நிறைவாக நூலகர் ஏ.வனிதா நன்றி கூறினார்.