திருப்பூர், ஜூன் 24 – கொரோனா பாதிப்பினால் மக்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப் பட்டு வருமானம் இல்லாமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கும் நிலை யில் திருப்பூரில் பல தனியார் பள் ளிகளில் பெற்றோரைக் கட்டாயப் படுத்தி கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பிர வீன்குமார் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் க. நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, மாவட்ட நிர்வாகி ரேவந்த் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினர்.
இதில் பங்கேற்ற மாணவர்கள், தனியார் பள்ளிகளில் அரசு உத்த ரவை மீறி பெற்றோரைக் கட்டா யப்படுத்திக் கட்டணம் வசூலிப் பதைக் கண்டித்தும், எட்டாம் வகுப் புக்கு குறைவான வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், மேல் வகுப்புக ளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்ப தற்கு பல குடும்பங்களில் செல் போன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், போதிய இணைய வசதி கிடைப் பதை உத்தரவாதம் செய்த பிறகே அந்த வகுப்புகளை நடத்த வேண் டும். பெற்றோரையும், மாணவ, மாணவிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி மனஉளைச்சல் ஏற்ப டுத்தக் கூடாது என்ற கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடி வில் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி மனுக் கொடுக் கப்பட்டது.