tamilnadu

அவிநாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசி, மார்ச் 9- தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மார்ச் 11ஆம் தேதி (புதன்) காலை 11 மணிக்கு மின் நுகர் வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்கிறார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.