tamilnadu

img

கரைப்புதூரில் டெங்கு தடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர், அக். 24- பல்லடம் ஒன்றியம், கரைப்புதூரில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் வியா ழக்கிழமையன்று டெங்கு தடுப்பு தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கரைப்பதூர் ஊராட்சி, சென்னிமலைபாளையத்தில் வியாழ னன்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற் றது. இப்பணியை அனைத்துத்துறை அலுவலர் களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர். மேலும், மருத்துவ முகாம் நடத்துதல், நில வேம்பு குடிநீர் வழங் குதல் மற்றும் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டன. அத்துடன், பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்கவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர் கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில்  தண்ணீர் தேங் காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் வலியுறுத் தினர்.  இதற்கிடையே, இப்பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், பொது வாக தற்பொழுது காய்ச்சல் காலமாக உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று நாள் காய்ச்சல் இருந்தால், ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருட்களை தேக்கி வைக்க வேண்டாம்.  நீர் தேக்கத் தொட்டி மற்றும் தண்ணீர் குடங்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள் மருந்துகள் தெளிக்க வரும் பொழுது பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்தார். முன்னதாக, கணபதிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பற்றி பொது மக்கள் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளின்போது, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்பதூர் ஏ.நடராஜன், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் பாலமுருகன், பானுப்பிரியா, உதவி செயற்பொறி யாளர் கற்பகம், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.