அவிநாசி, செப். 30- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குருதிக் கொடையாளர் களுக்கு பாராட்டு மற்றும் சான் றிதழ் வழங்கும் விழா அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் ஞாயி றன்று அவிநாசி அருகே உள்ள முத்துசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க நிர் வாகி பன்னீர்செல்வம் வரவேற் றார். இதில் வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ் கலந்து கொண்டு உரை யாற்றினார். இதையடுத்து அவர் பேசுகை யில், இந்தியா ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் 33 பேர் ரத்தம் கொடையாக அளித்தது பாராட்டுக்குரியது. இந்திய முழுவ தும் ஒரு வருடத்திற்கு தேவைப்ப டும் ரத்ததின் அளவு ஒரு கோடியே 34 லட்சம் யூனிட் ஆகும். இந் நிலையில் மருத்துவமனை சார்பில் முகாம்கள் மூலமாக ரத்தம் கொடையாக ஒரு கோடியே 14 லட்சம் யூனிட்டுகளாக பெறப்படு கிறது. தமிழக வாக்காளர் எண்ணிக்கை 4 கோடிக்கு மேலே உள்ளது. இதில் 10 சதவிகித மானவர்கள் ரத்தம் கொடையாக அளித்தால் எந்த உயிரும் பறி போகாது. இதை கருத்தில் கொண்டு தான் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ரத்த தான கழகம் ஆரம்பித்து சேவை யாற்றி வருகிறது. மேலும் சமூக மாறுதலுக்கும் போராடி வரு கிறது. மேலும் சுகாதார சீர்கேடு காரணமாக பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மதுவால் தற்போது தமிழகம் அழிவை நோக்கி சென்று கொண் டிருக்கிறது. மது குடித்துவிட்டு வாகனங்களில் செல்பவர்கள் மீது அபராதம் விதிக்கிறது காவல் துறை. ஆனால் டாஸ்மாக் மூட போராடினால் அடக்குமுறை ஏவு கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் பேர் மருத்துவம் பயின்று வெளியே வருகிறார்கள். இதன்படி ஒவ் வொரு சுகாதார நிலையத்திற்கு இரு மருத்துவர்களை நியமனம் செய்யலாம். மேலும் படித்தவர் களுக்கு போதிய வேலை கிடைக் காமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசு ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக் கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கிறது. சமூகத் தில் அனைவருக்கும் ஒரே மாதிரி யான கல்வி, மருத்துவம் கொடுக்க வேண்டும். இதற்காக வாலிபர் சங்கம் போராடி வருகிறது. இந்த போராட்டங்களில் இப்பகுதி மக்கள் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அருள், முன்னாள் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங் கத்தின் மாநிலத் தலைவர் முத்து சாமி, விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வெங்கடா சலம், கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் வேலுசாமி, ஒன்றியச் செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.