tamilnadu

img

சாலையோர மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுத்திடுக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 4- நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைப் போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம், வெள்ள கோவில், முத்தூர் ஆகிய பகுதிகள் மட்டுமின்றி காங்கேயம் தாலுகாவில் கிராமப்புறங்களில் உள்ள சாலையோர மரங்களில் பல்வேறு விளம்பர தட்டிகள், பிளாஸ்டிக் பதாகைகள் மரங்களில் ஆணி அடித்து மாட்டப்பட்டுள் ளது. இவ்வாறு மரங்களில் ஆணி அடிப்ப தால் மரங்கள் காய்ந்து விடுகின்றன. தற்போது வர்த்தக நிறுவனம் மற்றும் தனி யார் பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை  விளம்பரங்கள் ஏராளமானவை மரங்களில் காணப்படுகிறது. மரங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கல்வி புகட்டும் கல்வி நிலையங்களே இந்த தவறுகளை செய்து  வருகின்றன.  எனவே, இவ்வாறு மரங்களில் ஆணியடித்து விளம்பர பதாகைகளை வைத்த சம்பந்தப்பட்ட கல்வி நிலையங் கள் மற்றும் நிறுவனம் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் பெருமள வில் அகற்றப்பட்டுள்ள நிலையில், மாவட் டத்தின் மொத்த பரப்பளவில் மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந் துள்ளது. மரங்களில் வைக்கப்படும் இவ்வ கையான விளம்பர தட்டிகளை சமூக ஆர்வ லர்கள் அவ்வப்போது அகற்றி வந்தாலும், மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டி கள் வைப்போர் நிறுத்துவதில்லை. அதிகா ரிகளும் இந்தகைய செயலை கண்டு கொள் ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றன. மேலும், பெயளவிற்கு அபராதம் விதிக்கின் றனர். ஆணி அடிப்பதால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன், அதிகாரிகள் காவல் பாதுகாப்புடன் விளம்பர தட்டி களை அகற்றினர்.  தற்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால் மரங்கள் பசுமையை இழந்து வருகிறது. எனவே, மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து மரங்களின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.