tamilnadu

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை: தூத்துக்குடியில் 4 பேர் வீடு திரும்பினர்

தூத்துக்குடி, மே 23- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொ ரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று  குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று  குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 பேர் சனியன்று வீடு திரும்பினர்.  தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவம னையில், மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்துள்ள கணக்கீட்டின் படி 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட வர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் பழங்களை கொடுத்து, 14 நாள்கள் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார்.