tamilnadu

img

24 ஆயிரம் வருடம் பழமையானது தேரிக்காடு வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தகவல்

 தூத்துக்குடி, செப்.29- தூத்துக்குடி மாவட்ட தேரிக் காடு பகுதிகள் 24 ஆயிரம் வருடம் பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ பீர்பால் சானியின் பழைய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி யாளர் மொர்தெகாய். இவர் வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை நிகழ்வை வைத்துக் காலத்தினை கணிக்கும் வல்லுநர். இவர் ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வெளியே தெரிந்த கட்டிடங்களை ஆய்வு செய்ய வந் தார். இவர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டார். பின் செங்கல் கட்டிடங்கள், கல் தூண்கள், அதில் வரையப்பட்ட சிற்பங்கள், மேலும் நங்கூரம் போன்ற அமைப்புகள். நுழைவு வாயில் போன்றவற்றை பார்வையிட்டார். பின் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஏற்கனவே இந்த பகுதி யில் பல ஆய்வுகள் நடத்தியுள் ளோம். தேரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த போது 24 ஆயிரம் வருடம் பழமையானது என்பதை கண்டு கொண்டோம். அதன் பிறகு கொற்கை துறை முகம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கொற்கை ஒரு துறைமுகமாக இருந் தது என்பது வரலாற்றுக் குறிப்பு களிலிருந்து மெகஸ்தனிஸ் கி.மு. 302 லும் எரித்ரியன் (கடல் வழிப் பய ணம் ஆசிரியர்), கி.பி. 80 லிலும், தாலமி கி.பி 130 லிலும் கிடைக்கிறது. பின்னர் கி.பி. 1296 ல் மார்க்கோ போலோ பழைய காயலில் வந்து படகில் இறங்கியதாகவும், அங்கி ருந்து மதுரை பாண்டிய மன்னனைக் காணச் சென்றதாகவும் குறிப்பிடப் படுகிறது. இக்குறிப்புகளின் அடிப்ப டையில் முதலாவது கொற்கையில் துறைமுகமிருந்ததாகவும், பின்னர் கடல் மட்டம் தாழ்ந்த காரணத்தி னாலோ, அல்லது தரைமட்டம் உயர்ந்ததாலோ அத் துறைமுகம் கைவிடப்பட்டு பழைய காயலுக்கு இடம் பெயர்ந்ததாக கருத முடி கிறது. பின்னர் பழைய காயல் துறை முகமும் கைவிடப்பட்டு தூத்துக் குடிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். ஏனெனில் கோழிக்கோட்டிலிருந்து கடல் மார்க்கமாக தெற்கே வந்த போர்ச்சுக்கீசியர்கள் கி.பி 1532 இல் தூத்துக்குடியில் தான் இறங்கு கிறார்கள். இங்குள்ள தேரிக்காடு 24 ஆயிரம் வருடம் பழமையானது. நாங்கள் மேற்கொண்ட கொற்கை ஆராய்ச்சிக்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. கொற்கை துறைமுகமும் பழைய காயல் துறைமுகமும் எப்போது ஏன் கைவிடப்பட்டன என்பது தான் அந்த நோக்கங்கள். ஆனால் இதை நாங்கள் அகழ்வாராய்ச்சியாக கொண்டு செல்ல விரும்பவில்லை. மாறாக புவியாராய்ச்சியின் வழி யாகவே கொண்டு செல்கிறோம். நாங்கள் கடலை விட்டு அதிக தூரத் திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற குளத்திலும், கொற்கை குளத்திலும் பழையகாயல் குளத்திலும் மாதிரி களை ஒவ்வொரு இரு சென்டிமீட்டர் ஆழத்திலும் எடுத்து சென்றுள் ளோம். அம்மாதிரிகளில் இருந்து, காலக் கணிப்பை செய்த பின்பு, மகரந்த தூள்கள், நுண்ணுயிரிகள் (ஆழக்கடல், கடற்கரை, நன்னீர் குளம்) மற்றும் புவி வேதியல் தனி மங்கள் மூலக் கூறுகளைப் பிரித்து ஆராய்ந்து, அந்தத்த தகவல்களின் அடிப்படையில் கடல்மட்டம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எந்த அளவு இருந்திருக்கும், அப்போது கடலின் ஆழம் எவ்வளவு இருந்தி ருக்கும், அந்த ஆழத்தில் படகுகள் வந்து செல்ல வாய்ப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்ற கணிப்பு களை செய்ய இயலும்.  இதன் அடிப்படையில் அந்தக் காலகட்டத்தில் துறைமுகம் செயல் பட்டிருக்குமா? கைவிடப்பட்டிருக் குமா? என்று தெரிந்து கொள்ள இய லும். மேலும், எதனால் இத் துறை முகங்கள் கைவிடப்பட நேர்ந்தன என்றும் அறிந்து கொள்ள இயலும். இந்த வேளையில் தான் ஆத்தூர் பகுதியில் கட்டிடங்கள் தெரிகிறது  என்பதை பத்திரிக்கை செய்தி வாயி லாக தெரிந்து கொண்டோம். எனவே இன்று இதை ஆய்வு செய்ய வந் துள்ளோம். இங்குள்ள செங்கல் களை ஆய்வுக்கு எடுத்து செல்கி றோம். இதன் மூலம் இந்த கட்டிடங்க ளின் வயதை கண்டறியலாம்.  அப்போது கொற்கை துறை முகத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பு, எங்களது கொற்கை ஆய் வுக்கு மிக உதவியாக இருக்கும். இதைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகும் என்று பா.மொர்தெகாய் தெரிவித்தார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரி யல் தொழில் நுட்பத்துறை தலை வர் டாக்டர் சுதாகரன், சமூக ஆர்வ லர் நெடுஞ்செழியன், அருண்மொழி பாண்டியன், சமூக ஆர்வலர் மேலப் புதுக்குடி ஜெபராஜ் உள்பட பலர் வந்தனர்.