tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்வோம்

திருவாரூர்:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என திருவாரூரில் கட்சியின் மாநிலச்

செயலாளர் இரா.முத்தரசன் வியாழக் கிழமையன்று அறிவித்துள்ளார்.


மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்போற்றப்படும் காவிரி டெல்டா இயற்கை யின் சீற்றத்தால் ஒரு புறத்திலும் மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால் மற்றொரு புறத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது மத்திய அரசு விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 274 இடங்களில் மிகப் பெரிய கிணறுகள் அமைத்து ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கி இருப்பது பேராபத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். 


ஏற்கனவே இத்திட்டத்தை எதிர்த்து போராடி கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு பொதுப் பிரச்சனை யாக இதனை அணுகி வருகிறது. செயல் படுத்தப்பட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய போராட்டக் குழுக் களை கிராமங்கள் தோறும் அமைத்து வருகின்றன. தற்போது போராட்டங்களும் ஆங்காங்கே தொடங்கியுள்ளன. 


வரும் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணி க்கை முடிவடைந்தவுடன் போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அவரது அமை ச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் காப்பதன் மூலம் இந்த ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்கின்ற சந் தேகத்தை ஏற்படுத்துகிறது. 


எனவே இத்திட்டத்தை எதிர்த்து வலிமையான போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது. மத்திய அரசு இரக்கமற்ற அரசாக கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவளித்து வரும் அரசாகச் செயல்படுகிறது. தமிழகத்தை மத்திய மோடி அரசு வெறுப்பான மனநிலையிலேயே பார்க்கிறது. அதன் காரணமாகவே தமி ழகத்தின் மக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்க நினைக்கின்றது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு அங்கு நடந்த அசம்பாவிதம் போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் காவிரி டெல்டாவில் நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறதோ என்கின்ற சந்தேகம் எழுகின்றது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும்.


ஜூன் 12 நெருங்கிவிட்ட நிலையில் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டிய நிலையில் அணையில் குறைந்த அளவு நீர் மட்டுமே உள்ளது. எனவே காவிரி நதிநீர் ஆணையம் கூட்டம் இன்னும் கூட்டப்படாமல் உள்ளது. அந்த ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மாநில அரசும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கிறது. நெருங்கி விட்ட நிலையிலும் தூர்வாரும் பணிகள் இன்னும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைத்து

தூர்வாரும் பணிகளை செய்ய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் வாக்கு எண்ணிக்கை யின் போது கலவரத்தை ஏற்படுத்த அதிமுகதிட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது. 


தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் கமலஹாசன் பேசியது ஒரு மிகப்பெரிய பிரச்சனை அல்ல. காந்தியை சுட்டுக் கொன்றது சரி என பேசுகின்ற அளவுக்கு பாஜக சென்றுவிட்ட நிலையில் அதற்கு ஒருசில அதிமுக அமைச்சர்களும் துணை போகிறார்கள். குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாக்கை அறுப்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். காந்தியை காட்டி கோட்சேவை உயர்த்தி பிடிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் துணிந்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ, எம்.செல்வராசு முன்னாள் எம்.பி, பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் அருகில் இருந்தனர்.