தஞ்சாவூர், செப்.24- தஞ்சாவூரில், திங்கள்கிழமை பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 538 மனுக்களை மக்கள் நேரில் அளித்தனர். தொடர்ந்து, திரு வையாறில் பெற்றோர்களால் கைவிடப்பட்டு கண்டெடுக்கப் பட்ட 3 மாத கைக்குழந்தையினை பராமரிப்பிற்காக சேலம் லைப் லைன் டிரஸ்ட் தத்து நிறுவனத்திடம் ஆட்சியர் ஒப்ப டைத்தார். பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.